அர்த்தமில்லாத அவஸ்தைகள்

உனதுகண்ணீரில்
நனைந்து போனது
எனது மனசு

இருவரதும்இறுக்கத்தை
அதிகப்படுத்தும்
அல்லதுகுறைக்கும்
நம் மௌனங்கள்
கண்ணீரிலா முடிய வேண்டும்?

தனிமையில்
நம் பிரிவின் வலிகளில்
நான் வடிக்கும்கவிதைகளில்
நிறையவே பொதிந்துகிடக்கின்றன
சில கண்ணீர்த்துளிகளும்
சில இரத்தத்துளிகளும்

நினைவுகளை
பின்னோக்கிநகர்த்திவிட்டு
இனி ஒரு போதும்
நிகழ முடியாதஅந்த நாட்களில்
புதைந்து கிடக்கிறேன்

வசந்த காலஇலைச் சருகின்
முனகலும்
மயான வெளியில்
பறவைகளின்அலறலும்
சிந்தனையின்வெற்றிடத்தை
நிரப்பிக் கொண்டிருக்கின்றன

நீ பற்றியஞாபகங்கள்
நொந்துபோன
மனசின் பரப்புகளில்
அர்த்தமில்லாத அவஸ்தைகளாய்
கனக்கின்றன

ஒரே ஒரு கேள்வி
அகால மரணமாய்
திடீரெனச் செத்துப்போனதே
நம் உறவு

எப்படி
நேர்ந்தது
அது?

1 comments:

Unknown said...

Thank Mr. Sibli
welcome u and doing ur poems