ஷிப்லி எழுதிய "நிழல் தேடும் கால்கள்"
கவிதை நூல் வெளியீட்டு விழா


இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடாக

நீலாவணன் அரங்கில்

கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய

நிழல் தேடும் கால்கள்(கவிதை நூல்)

இடம் :-கேட்போர் கூடம் தென்கிழக்குப்பல்கலை ஒலுவில் இலங்கை

காலம் :- 2008-04-23 புதன்கிழமை மதியம் 01.30 முதல்

பிரதம அதிதி :- கலாநிதி ஏ.ஜி.ஹீசைன் இஸ்மாயில் உபவேந்தர் தென்கிழக்குப்பல்கலை

அனைவரையும் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வரவேற்கிறது

யாரிடம் போய்ச்சொல்லி அழ...............


யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?


நிந்தவூர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை

இந்த மெல்லிய இரவில்


தூக்கம் இருண்டு போன

இந்த மெல்லிய இரவில்

விழித்திருக்கும்

என் உணர்வுகளைச்சுட்டி

எதைப்பற்றி நான் பாடப்போகிறேன்…?


பாசம், மனசு, நட்பு

எல்லாமே பொய்யாகிவிட்ட

வாழ்க்கையை இனியும் வாழ்ந்து

எதை சாதிக்கப்போகிறது

எனது எதிர்காலம்..


வலிக்கிறது

என் விரல்களும்

இதயமும்..


கருகிப்போன கனவுகளை

மீண்டும் யாசிக்கிறது

என் கண்கள்..

உருகிப்போன நினைவுகளை

மீண்டும் தாகிக்கிறது

என் கணங்கள்…


வலிகளில் நிறைந்து போன

என் விழிகளைப்பற்றி

ரணங்களில் புதைந்து போன

என் ஆத்மார்த்தம் பற்றி

துயரப்பாடல்கள் உச்சரிக்கும்

என் பேனா பற்றி

காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்

என் பாவப்பட்ட இதயம் பற்றி

இனிப்பேச யாருமில்லையா…?


உலுக்கி எடுக்கும்

அதிர்வுகளைத் தாங்கி

வாழ்தல் மீதான பயணம் நீள்வது

அத்தனை எளிதில்லை


இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்

அநாதையான பின்பும

நம்பியிருந்த உறவுகள்

சுக்கு நு}றான பின்பும்

தேக்கி வைத்த நம்பிக்கை

வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?


காலியாகிப்போன பாசப்பைகளில்

இனி நான் இடப்போவதில்லை

சில்லறை மனிதர்களை..


எல்லா இதயங்களிலும்

போர்வைகள்..

எல்லா முகங்களிலும

முகமூடிகள்..

எல்லா புன்னகைகளிலும்

விஷங்கள்..

எல்லா பார்வைகளிலும்

வக்கிரங்கள்..


உறவென்னும் தேசத்தில்

அகதியாக்கப்பட்டவன் நான்


மனிதர்களைத்தேடிய

என் நித்திய பயணத்தில்

எப்போடு நிகழும் திடீர் திருப்பம்?


யாரையும் குற்றம் சாட்டவில்லை

காரணம்

முதல் குற்றவாளி நான்தானே…?


தூக்கம் இருண்டுபோன

இந்த மெல்லிய இரவில் விழித்திருக்கும்

என் உணர்வுகளைச்சுட்டி

இன்னும் எதைப்பற்றி

நான் பாடப்போகிறேன்…?


ஷிப்லி தென்கிழக்குப்பல்கலை இலங்கை (0094)0716035903