எல்வோருக்கும் வணக்கம்..




நம்மில் பலபேர் வேகமாக தட்டச்ச வேண்டும் என்று அங்கலாய்ப்பது தொடர்ந்து நிகழ்ந்து வருவதுதான்..பலர் பணம் கொடுத்தெல்லாம் தட்டச்சு பயின்ற காலமும் இருந்திருக்கிறது..ஆனாலும் இப்போது நிறைய மென்பொருட்கள் இலவசமாகவும் பணத்திற்கும் இணையத்தளத்தில் கிடைக்கின்றன.



இன்றைக்கு நான் உங்களுக்கு தரப்போகும் சுட்டியும் இலவசமாக தட்டச்சுப்பயிற்றுவிக்கும் ஒரு மென்பொருள்தான்..மிகக்குறைந்த அளவில் பயனுள்ள மென்பொருளான இதனை கண்டிப்பாக நீங்களும் பதிவிறக்கி தட்டச்சுப்பயிலலாம்..



இதோ சுட்டி

http://www.download3000.com/download-rapid-typing-tutor-count-reg-19384.html

பயனுள்ள தகவல் எனின் மறக்காமல் ஒரு ஓட்டு..




பயனற்றதெனில் என்னைத்திருத்த ஒரு கமெண்டு



வாழ்க வளமுடன்




நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு!


நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத் தகுதி. கூடுதல் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட பணி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் பெறலாம். இந்த நல்ல வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் இன்னும் நல்ல வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அறிவிக்கை பற்றிய விவரம்:

நகராட்சி ஆணையர்: மொத்த பணியிடங்கள் -3
சம்பளம் – ரூ 9300-34800 + ரூ 4600

2. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (சட்டம்) – 13
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600
3. அஸிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீஸர் (டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம்) – 4
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4600
4. புரபேஷன் ஆபீஸர் (டிபன்ஸ் சர்வீஸ்)-10
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500
5. புரபேஷன் ஆபீஸர் (ஜெயில் சர்வீஸ்)-4
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500
6. ஜூனியர் எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸர் -9
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500
7. அஸிஸ்டன்ட் லேபர் இன்ஸ்பெக்டர் -20
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4400
8. சார் பதிவாளர் -29
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300
9. மகளிர் நல அலுவலர் (சோஷியல் டிபென்ஸ்) -1
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4300
10. தொழில் கூட்டுறவு கண்காணிப்பாளர் -7
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4200
11. தணிக்கை ஆய்வாளர் (இந்து அறநிலையத் துறை) – 27
சம்பளம்: ரூ 9300-34800 + ரூ 4500
12. வருவாய் துறை உதவியாளர் (அனைத்து மாவட்டங்கள்) – 875
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
13. செயல் அலுவலர் – 5
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
மேலே உள்ள 13 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பின்வரும் 8 பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் போதும்!
14. வணிக வரித்துறையில் உதவியாளர் (அமைச்சுப் பணி)-3
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
15. தொழில் மற்றும் வர்த்தக துறை உதவியாளர் – 63
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
16. வருவாய் ஆணையர் அலுலவக உதவியாளர் – 6
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
17. நில நிர்வாகத் துறை அலுவலக உதவியாளர் -2
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
18. திட்டக் குழுவில் திட்ட உதவியாளர் – 1
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
19. கீழ் நிலை எழுத்தர் – சட்ட மன்றம், தலைமைச் செயலகம் – 3
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
20. டிஎன்பிஎஸ்ஸி அலுவலக உதவியாளர் -4
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
21. சட்டத் துறையில் உதவியாளர் -2
சம்பளம்: ரூ.5200-20200+ரூ.2400
விண்ணப்பங்களை தபால் அலுவலகங்களில் ரூ 30 செலுத்திப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தேர்வுக் கட்டணம்: ரூ.100. இதையும் தபால் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
ஆதி திராவிடர் / பழங்குடியினர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ பிற்படுத்தப்பட்டோர் / முன்னாள் ராணுவத்தினர் / கைம்பெண்கள் / ஊனமுற்றோருக்கு முழுமையான கட்டண விலக்குண்டு.

மிக முக்கியமானது:
A Date of Notification 15.11.2009 -
B Last date for receipt of applications 30-12-2009 5.45 P.M.
C Date of Written Examination 11-04-2010 10.00 A.M. to 1.00 P.M.
மேலும் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in பார்க்கவும். முழு விவரங்களையும் இங்கு பிடிஎப் கோப்பாகவும் தந்துள்ளோம்.
டிஎன்பிஎஸ்ஸி அறிவிப்பு ஆங்கிலத்தில் – not_eng_css2009
விண்ணப்பம், தேர்வு முறை, மையம், சலுகை குறித்த விவரங்கள்- தமிழில்.. instns_tam_new
மிக அரிய வாய்ப்பு… தவற விடாதீங்க!
Nadu Labour
Subordinate Service
1068 20
8. Sub-Registrar Grade –II
Revised Pay +Grade Pay
PB2 Rs.9300-34800+Rs.4300/-.
Tamil Nadu Registration
Subordinate Service
1071 29
9. Women Welfare Officer
Revised Pay +Grade Pay
PB2 Rs.9300-34800+Rs.4300/-.
Tamil Nadu Social
Defence Subordinate
Service
1012 1
10. Supervisor of Industrial Cooperatives
in the Industries and
Commerce Department
Revised Pay +Grade Pay
PB2 Rs.9300-34800+Rs.4200/-.
Tamil Nadu Industries
Subordinate Service
1022 7
11. Audit Inspector in the Audit Wing
of Hindu Religious and Charitable
Endowments Administration
Department.
Revised Pay +Grade Pay
PB2 Rs.9300-34800+Rs.4200/-.
Tamil Nadu Ministerial
Service.
1029 27
2
12. Assistant in Revenue Department (in
the following Districts) District-wise
Number of vacancies / Post Code No.)
Ariyarlur -16(Post Code No.2120)
Chennai -36(Post Code No.1033)
Coimbatore -27(Post Code No.1034)
Cuddalore -24(Post Code No.1035)
Dharmapuri -07(Post Code No.1036)
Dindigul -08(Post Code No.1037)
Erode -20(Post Code No.1038)
Kancheepuram -04(Post Code No.1039)
Kanyakumari -20(Post Code No.1040)
Karur -30(Post Code No.1041)
Krishnagiri -22(Post Code No.2200)
Madurai -46(Post Code No.1042)
Nagapattinam -38(Post Code No.1043)
Namakkal -19(Post Code No.1044)
The Nilgiris -45(Post Code No.1045)
Perambalur -07(Post Code No.1046)
Pudukkottai -60(Post Code No.1047)
Ramanathapuram -14(Post Code No. 1048)
Salem -43(Post Code No.1049)
Sivaganga -05(Post Code No.1050)
Thanjavur -38(Post Code No.1051)
Theni -25(Post Code No.1052)
Thoothukudi -19(Post Code No.1056)
Tiruchirappalli -34(Post Code No.1057)
Tirunelveli -55(Post Code No.1058)
Tiruppur -20(Post Code No.2202)
Tiruvallur -12(Post Code No.1053)
Tiruvannamalai -47(Post Code No.1054)
Tiruvarur -22(Post Code No.1055)
Vellore -37(Post Code No.1059)
Villupuram -65(Post Code No.1060)
Virudhunagar -10(Post Code No.1061)
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu Ministerial
Service.

875
13. Executive Officer Grade-II in Town
Panchayats Department (District wise
distribution of vacancies)
Coimbatore -1
Erode -1
Kancheepuram -1
Kanyakumari -1
Tiruvannamalai -1
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu Town
Panchayat
Subordinate Service.
1091 5
TABLE-II
Posts for which selection is made through Written Examination alone.
Sl. No.
Name of the Post
&
Scale of Pay
Service Post
Code
No.of
Vacancies
14. Assistant in the Office of the
Commissioner of Commercial
Taxes
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu
Ministerial Service.
1025 1
3
15. Assistant in the Industries and
Commerce Department
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu
Ministerial Service
1027 63
16. Assistant in the Office of the
Commissioner of Revenue
Administration
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu
Ministerial Service
1030 6
17. Assistant in the Office of the
Commissioner of Land Administration
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2400/-.
Tamil Nadu
Ministerial Service
1031 2
18. Planning Junior Assistant Tamil
Nadu State Planning Commission
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2200/-.
Tamil Nadu
Ministerial Service
1032 1
19. Lower Division Counter Clerk in the
Tamil Nadu Legislative Assembly
Secretariat
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2200/-.
Tamil Nadu
Legislative Assembly
Secretariat Service
1086 3
20. Assistant in the Office of the Tamil
Nadu Public Service Commission
Revised Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2200/-.
Tamil Nadu
Secretariat Service
1081 4
21. Assistant in Law Department in Tamil
Nadu Secretariat
Pay +Grade Pay
PB1 Rs.5200-20200+Rs.2200/-.
Tamil Nadu
Secretariat Service
1076 2
2. IMPORTANT DATES :
Date Time
A Date of Notification 15.11.2009 -
B Last date for receipt of applications 30-12-2009 5.45 P.M.
C Date of Written Examination 11-04-2010 10.00 A.M. to 1.00 P.M.
3. GENERAL INFORMATION :-
A. The rule of reservation of© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.
Written by: envazhi   | Filed under Career
Tags: employment, society, tamil nadu govt, TNPSC, சமூகம், டிஎன்பிஎஸ்ஸி, வேலைவாய்ப்பு

URL LINk: http://www.envazhi.com/?p=13690

Thanks to Rishan Sheriff




ஆங்கிலப்படங்களில் இடம்பெற்ற 10 மிகச்சிறந்த முத்தஙகள் (+18)

இதற்கெல்லாம் ஒரு தரவரிசையா என்று கேட்க வேண்டாம்..காட்டுங்கள உங்கள் கைவரிசையை sorry வாய்வரிசையை ஹிஹிஹி

http://www.youtube.com/watch?v=mp1gyUle0k4

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் கூட்டு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன் தீர்மானித்துள்ளன.




இன்று இடம்பெற்ற கட்சியின் உயர்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்


காஞ்சீபுரம், நவ. 21-

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. தேவநாதன் அளித் துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது பூர்வீகம் காஞ்சீபுரம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் இருந்தே எனது தந்தைக்கு துணையாக கோவிலில் வேலை பார்த்து வந்தேன். அப்போது முதல் கோவிலுக்கு வரும் பெண்களிடம் கனிவாக பேசக்கற்றுக்கொண்டேன்.

பெரும்பாலான பெண்கள் ஏதாவது வேண்டுதலோடுதான் கோவிலுக்கு வருவார்கள். எனது 15 வருட அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ள எண்ணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் ஏற்பட்டது. குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசத்தில் ஈடுபட்டேன். அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன்.

பெரும்பாலான பெண்களிடம் “அம்பாள்” போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும் 16 ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் வைத்து இன்பம் பெற வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.

சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜூக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன். 2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் போட்டோ காமிரா வசதி இருந்தது.

கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக பட மெடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன். இது போல தொடர்ந்து செய்து வந்தேன்.

எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி கோவிலில் என்னுடன் லீலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து லீலைகளில் ஈடுபட்டேன்.

இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்து வந்தேன். சில பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்தேன்.

தனது குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் ஒருவரை மயக்கினேன். குழந்தைக்கு நோய் தீர வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன். அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன்.

தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை. எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமார் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரிய வில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவ விட்டது தெரிந்தது.

நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன்.

கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அர்ச்சகர் தேவநாதன் ஏராளமான பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்டார். 8 பெண்களின் பெயரை வெளியில் சொல்லி உள்ளார். அவர்களில் சில பேரோடு லாட்ஜூகளிலும் அறை எடுத்து தங்கி உள்ளார். அவர் அடையாளம் காட்டிய பெண்களிடமும் விசாரணை நடத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். நேற்று முழுவதும் லாட்ஜூகளில் அதிரடி வேட்டை நடத்தினார். அர்ச்சகருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களை திரட்டி உள்ளனர்.

நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததால் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். போலீசார் தேவநாதனிடம் இன்னும் ஏராளமான தகவல்கள் பெற உள்ளதால் மேலும் 3 நாட்கள் காவல் நீட்டிப்பு கோரினர். ஆனால் போலீஸ் காவல் நீட்டிக்கப்படவில்லை.அதனை தொடர்ந்து தேவநாதன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Thanks to Kamesh (Anbudan)

மைக்கல் ஜாக்ஸனின் இறுதி ஊர்வலம்


















மிக அண்மையில் பிரபலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் "ஸ்லம்டக்
மில்லியனர்"என்கிற ஆங்கிலம் கலந்த இந்த ஹிந்தி திரைப்படம் இந்திய
சினிமாவை உலகத்தரம் வாய்ந்ததாக மீண்டும் ஒரு முறை
பறைசாற்றியிருக்கிறது.ஏற்கனவே லகான், ஓம் சாந்தி ஓம், ஜோதா அக்பர் போன்ற
படங்கள் உலகெங்கும் பிரபலமாகி இந்திய சினிமாத்தரத்தை வெகுவாக
திரும்பிப்பார்க்க வைத்தன.ஆனால் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி ஒரு சில
பிரபலங்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்தப்படம் சாதித்துக்கொண்டிருக்கும்
ஏன் சாதிக்கப்போகும் மைல்கல்கள் ஏராளமோ ஏராளம்.

செலடார் பிலிம்ஸ் தயாரிப்பில் டென்னி போயெல் இயக்கிய இந்தப்படத்தில் துணை
இயக்குநராக லவ்வீன் தண்டலும், திரைக்கதையை சைமன் பபேயும்
வடிவமைத்துள்ளனர்.தயாரிப்பாளராக கிரிஸ்டியன் கொல்ஸனும், நாயகனான ஜமாலின்
இளமைப்பருவ கதாபாத்திரத்தில் தேவ் பட்டேலும், ஜமாலின் சிறுவர்பருவத்தில்
தனய் சேடாவும், துறு துறு குழந்தைப்பருவ கதாபத்திரத்தில் அயூஸ் மகேஸ்
கடேகரும் நடித்திருந்த அதேவேளை நாயகியாக பிடே பிந்தோவும், கௌரவ வேடத்தில்
அனீல் கபூரும், போலீஸ் துப்பறிவாளனாக இர்பானும் பாத்திரமறிந்து
நடித்ததோடு முகம் காட்டாமல் அனைத்து ரசிகர்களையும் இசையால்
கட்டிப்போட்டிருப்பவர் நம் இசைப்புயல் ஏ.ஆர.ரஹ்மான்.


இனி கதையின் விளிம்பிற்கு வருவோம்.படம் ஆரம்பிக்கும்போது பார்வையாளர்களை
நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அது இதுதான் "ஜமால் 20 மில்லியனை
எவ்வாறு வெற்றி கொண்டான் ? முதல் விடைத்தெரிவு "அவன் ஒரு
ஏமாற்றுக்காரன்", இரண்டாவது விடைத்தெரிவு "அவன் அதிர்ஸ்டசாலி", மூன்றாவது
விடைத்தெரிவு "அவன் பெரும் அறிவாளி", நான்காவது விடைத்தெரிவு "அது
எழுதப்பட்ட விதி".அதற்கு விடைதான் முழுப்படத்தின் கதையுமே.

ஒரு தெருவோரப்பிச்சைக்காரனான ஜமால் 20 மில்லியனை ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் வென்று விடுகிறான்.அவன் ஏமாற்று வித்தைக்காரனாக இருக்கலாம்
என்று போலீஸ் சந்தேகித்து அவனை கைது செய்து மிகக்கொடுமையாக
விசாரிக்கிறது.பெரும் பெரும் அறிவாளிகளால் வெல்ல முடியாத பரிசை ஒரு
சாதாரண மனிதன் நீ எப்படி வெற்றி பெற்றாய் என்று அதட்டும் போலீசுக்கு
எனக்கு விடைகள தெரிந்திருந்ததால் நான் வென்றேன்" என்று சொன்னதுமே
தியேட்டர் நிமிர்ந்து உட்கார்கிறது.அவனிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு
கேள்விக்கும் அவன் எதை அடிப்படையாக வைத்து விடை சொன்னான் என்கிற பாணியில்
விரிகிறது கதை.


உண்மையில் ஜமாலாக நடித்த துறு துறு பையனும் சரி, சிறுவனும் சரி, இளைஞனும்
சரி இயல்பான நடிப்பில் நம்மை கட்டிப்போடுகிறார்கள்.படம் முழுவதும்
யதார்த்தம் நிரம்பி வழிகிறது.ஆரம்பத்தில் காட்டப்படும் கிராமம் அழுக்கு
நிறைந்த சேரிப்பகுதிகளின் உண்மை முகங்களை நமக்கு வெட்ட
வெளிச்சமாகக்காட்டுகிறது.அதேபோல கதையின் வழியே இணைந்து ஓடும்
கதாபாத்திரங்களும் யதார்த்தமாகவவே
வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு போலீஸ்காரர்களையும் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் இடையிடையே வரும் வன்முறைகளையும் கோடிட்டுச்சொல்ல முடியும்.


மில்லியன் பரிசப்போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜமாலின் வhழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவங்களும் விடையாக கோர்க்கப்பட்டிருக்கும் பாணி அற்புதமானது.விடையளிக்கும்போது தனது முகபாவங்களாலேயே நம்மையெல்லாம் நாயகன் வென்று விடுகிறான்.மேலும் பம்பாயில் குழந்தை கடத்தல்கள் விபச்சாரம் கேங்ஜஸ்டர்களின் ஆதிக்கம் போன்றனவும் ஆபாசமோ வன்முறையோ தலை தூக்காவண்ணம் மிக நுணுக்கமாக கையாளப்பட்டிருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

ஜமாலும் அவனது சகோதரனும் ரயிலில் செய்யும் திருட்டுக்களும் தாஜ்மகாலுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் அவர்கள் தாஜ்மகாலைப்பற்றி விளக்கும் காட்சிகளும் அமிதாப்பச்சனைக்காண ஜமால் மலசல கூடத்துக்குள் குதித்து எழும்புவதும் அழகான நகைச்சுவைகள்.அதேபோல நாயகி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும்போதும் ஜமாலின் கண்ணெதிரே அவனது சகோதரன் அவளை கற்பழிப்பதும் கண்ணீர்க்காட்சிகள்.தனது காதலியே ஜமாலை உடலுறவுக்கு அழைத்தும் அவன் மறுப்பதும் அவள் விபச்சாரியாக இருந்து திருந்தியவள் என்று தெரிந்தும் தொடர்ந்து அவன் அவளை தேடுவதும் உணர்ச்சிப்பிரவாகம்.

படத்தில் மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.யதார்த்தமாமான கதைக்கு உயிரோட்டமாக இசையமைத்துள்ளார்.கிராமியம் கலந்த சிறுவர்களுக்கு ஒரு விதமாமாகவும் சோகக்காட்சிகளுக்கு இன்னொரு விதமாகவும் மில்லியனர் நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வெவ்வேறு விதமாகவும் "மல்டி மியூசிக்கல் சோ" வையே ரஹ்மான் நிகழ்த்திக்காட்டுகிறார்.வெல்

டன் ரஹ்மான்.இதற்காக அவருக்கு "கோல்டன் குளோப்" விருது தகுதியானதுதான்.ஆஸ்காரையும் அவர் வெல்வார் என்று திடமாக நம்பலாம்.

கடைசியாக எவ்வாறு போலீஸ் ஜமாலையை நம்பி விடுதலை செய்கிறது என்பதும் ஜமாலின் காதலுக்கு என்ன நடக்கிறது எனபதும் படத்ததைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஜமால் 20 மில்லியனை எப்படி வென்றான் என்ற கேள்விக்கான விடையும் காட்டப்படுகிறது.

மொத்தத்தில் மிக அழகான ஒரு படத்தை பார்த்த திருப்தியை இந்தப்படம் தருகிறது.இரண்டே மணித்தியாலங்களுடன் முடிகின்ற இந்தப்படம் இரண்டு மூன்று நாட்கள் நமக்குள் அதிர்வை ஊற்படுத்துவதே படத்தின் மிகப்பெரிய வெற்றி.இந்திய சினிமாவில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்திருக்கிறது "ஸ்லம்டக் மில்லியனர்".

இருள் சூழ்ந்ததொரு அடர்ந்த வனாந்தரத்தின்
அசையும் ஒரு இலையென
எவர் கண்ணிலும் எட்டுவதாயில்லை
என் கண்ணிலிருந்து உகுக்கும்
பலப்பல கண்ணீர்த்துளிகளும் கனவின் கலைதலும்...

தனிமைத்தீயில் யதேச்சையாய் சிக்குண்ட
என் விதிக்கப்பட்ட கணங்களிலிருந்து
சிக்கிச்சின்னாபின்னமாகி சாம்பலாகிப்போனது
சில நினைவுகளும் அது சார்ந்த நிதர்சனங்களும்...

மழைநாள் மண்வாசமாய்
உயிரின் வேர்ப்பரப்பிலிருந்து
நினைவுகள் நனைக்கும் ஞாபக எச்சங்களின்
எழில் கோலங்கள் மொத்தமும்
முற்றுப் "புள்ளி" என்றாகிப்போன பின்
எதற்கிந்த வேசம்...?எதற்கிந்த சுவாசம்...??

உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஒரு ஏகாந்த இசையென
காற்றின் சுவடுகள் பற்றி
எங்கெல்லாமோ மிதந்து கொண்டிருக்கிறேன்...

நீளும் திசை வழியே
என் பாதையற்ற பயணம்
கானல் முகங்களில் மோதுண்டு
செய்வறியா பேரதிர்ச்சியுடன்
காகிதக்கப்பலாய் தத்தளிக்கிறது..

சுய கழிவிரக்கம் குறித்தான என்
நிசப்தப்புலம்பல்கள்
ஒரு வசந்தத்தின் பாடலுக்காய்
அழுதபடி தவமிருக்கிறது..

நிர்மூலமான நிகழ்காலத்தின்
மிக மெல்லிய இடுக்குகளில் கசியும்
நம்பிக்கைச்சூரியனும்
மெல்ல மெல்ல ஒளியிழக்கிறது
காலத்தின் கைகள் சுமந்திருக்கும்
இறுகிப்போன விலங்குகளை பார்த்த பின்பு.....

வாழ்வின் துயர் நிறை தருணங்கள்


வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது.....

சிறகொடிந்த அப்பறவைக்கு

அடுத்த திசைநோக்கிப்பறக்கும் வீரியம்

துளியேனும் கிடையாது..

விரிந்திருக்கும் வான்பரப்பில்

அதற்கான கனவுகளை மட்டும்

சிறகடிக்க விட்டு விட்டு

தனித்தலையும் ரண மழையில்

கொட்டக்கொட்ட நனைந்து கொண்டிருக்கிறது...

வலி மிகைத்த கவிதையொன்றின்

கண்ணீர் அறைகூவலை

எப்போதும் அதன் சோகம் கவிந்த

கண்களில் நீங்கள் காணக்கூடும்...

மீளமுடியாத

கனவுகளற்ற அதன் வாழ்வியல் கோலங்கள்

தவறாக வாழப்பட்ட

அல்லது

வாழ்தலில் நேர்ந்த தவறாக

ஏதோ ஒரு பிரளயத்தைசாற்றி நிற்கிறது..

வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது

எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது


ஷிப்லி

Live interview on Rupavahini Television

May Almighty's peace be upon you,

I was invited by Rupavahini Television for a live
interview on 21st of June 2008.
It Can be watched via following links.

1. http://www.youtube.com/watch?v=yovuJtOW2nE

2.
http://www.youtube.com/watch?v=llKQ5PJUfR8

3.
http://www.youtube.com/watch?v=Q_l9dabJugA

4.
http://www.youtube.com/watch?v=TZsm2A1mKrY

5.
http://www.youtube.com/watch?v=ws7J_nAbZeU

6.
http://www.youtube.com/watch?v=g4eu6a44J7s

7.
http://www.youtube.com/watch?v=8QIeYzjXiwg

8.
http://www.youtube.com/watch?v=OSaEpBkcgRQ

9.
http://www.youtube.com/watch?v=1VLsFJRLI14

10.
http://www.youtube.com/watch?v=9ZWMJzLIT50

or simply go to

http://www.youtube.com/profile_videos?user=amjadfha

to get all ten links in one single page....

Thank you.

Regards from,

Shibly.


01)நினைவுகள்

மெல்ல மெல்லஇருளத்தொடங்கி

எனது சுயம் எங்கோ

விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அவனது கைத்துப்பாக்கியால்தான்

இது நேர்ந்திருக்கக்கூடும்.

மனைவிக்கு மருந்து வாங்கப்போன

வழியில்தான் இப்படியாயிற்று.

பாவம் எனது இரண்டு வயதுப்பெண்பிள்ளை.

நேற்று ஜோசியக்காரன் சொன்னது நினைவில் விரிகிறது..

"எனக்கு கெட்டியான ஆயுள் ரேகையாம்"


02)அண்மித்துக்கொண்டிருக்கும்

மரணம்

இருதயத்துடிப்பையும்

சுவாசப்பைகளையும்

சதுதியாய் பிடுங்க்துடிக்கிறது.

யார் யாரோவெல்லாம்

என்னைச்சூழ்ந்து புலம்புகிறார்கள்

"தலையில்தான் குண்டு"

"பாவம் இளம் வயது"

"இது நமது குமாரின்...."

"சுட்டவனை யாரேனும் பார்த்தீர்களோ..?"

"அந்தப்பக்கமாய் ஒருத்தன் ஓடினான்"

எனக்காக வாதாடும் குரல்களின்

முகங்களைக்காண முடியாமல்

எனது கண்கள் மூடப்பட்ணுடுவிட்டன.


03)

வாழ்வின் கடைசி நிமிடங்கள்

என்னை குரூரமாய் அணைத்துக்கொள்கிறது.

எனது கடைசி சுவாசத்தை நோக்கி

நானே வேகமாய் விரைகிறேன்.

கைகளும் கால்களும்

அசைவற்ற நிலையின் வாசலில்..

கண்களின் வழியே கண்ணீரும்

உடலின் வழியே இரத்தமும்

கொட்டிக்கொண்டேயிருக்கிறது.

ஒரு மரணத்தை எதிர்கொள்ளும் வலி

இதைப்படிக்கும் உங்களால்

உணரமுடிவது சாத்தியமற்றது.


04)

கடைசியாய் இதயம் துடித்தடங்கிய போது

மனைவியின் முகமும் குழந்தையின்

எதிர்காலமும் கேள்விக்குறியாய் கீறிக்கிழித்தது.

வாழ்வின் கடைசி நிமிட குரூர அணைப்பில்

எனது ஆத்மா கலக்கிறது.

"உயிர் போய்விட்டது"

என்று யாரேனும் அடையாளம் காண்பான்

அதுவரை நானும்

ஒரு அநாதைப்பிணம்


05)

நேற்றுவரை கமகமத்த

என் உடல் வழியே

பிணநெடி வீசத்தொடங்கிவிட்டது..

செத்த பிறகும்கொட்டிக்கொண்டேயிருக்கிறது

குருதியாற்றின் மத்தியில் உடல் மிதக்கிறது படகாய்..

"இனந்தெரியாதோரால்இளம் தகப்பன் படுகொலை"

என நாளை அச்சேறப்போகிறது

பத்திரிகைகளில் எனது மரணம்.

எதற்காக நான் கொல்லப்பட்டேன்?

என்னைச்சுட்டுப்பொசுக்கிய கரம் யாருடையது?

எந்த விடையும் என் போலவே

யாருக்கும் தெரியாது..

எனது ஆத்ம சாந்திக்காக

எல்லோரும் பிரார்த்திப்பார்கள்.

நேற்று யாருக்கோ நிகழ்ந்நதே

இன்று எனக்கு நிகழ்ந்நது..

இன்று எனக்கு நிகழ்ந்ததே

நாளை யாருக்கோ நிகழப்போகிறது

மரணம் என்பது சில்லறையாய்மலிந்து போன இத்தேசத்தில்.....


நிந்தவூர் ஷிப்லி

தென்கிழக்குப்பல்கலை

இலங்கை

ஷிப்லி எழுதிய "நிழல் தேடும் கால்கள்"
கவிதை நூல் வெளியீட்டு விழா


இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடாக

நீலாவணன் அரங்கில்

கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய

நிழல் தேடும் கால்கள்(கவிதை நூல்)

இடம் :-கேட்போர் கூடம் தென்கிழக்குப்பல்கலை ஒலுவில் இலங்கை

காலம் :- 2008-04-23 புதன்கிழமை மதியம் 01.30 முதல்

பிரதம அதிதி :- கலாநிதி ஏ.ஜி.ஹீசைன் இஸ்மாயில் உபவேந்தர் தென்கிழக்குப்பல்கலை

அனைவரையும் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வரவேற்கிறது

யாரிடம் போய்ச்சொல்லி அழ...............


யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?


நிந்தவூர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை

இந்த மெல்லிய இரவில்


தூக்கம் இருண்டு போன

இந்த மெல்லிய இரவில்

விழித்திருக்கும்

என் உணர்வுகளைச்சுட்டி

எதைப்பற்றி நான் பாடப்போகிறேன்…?


பாசம், மனசு, நட்பு

எல்லாமே பொய்யாகிவிட்ட

வாழ்க்கையை இனியும் வாழ்ந்து

எதை சாதிக்கப்போகிறது

எனது எதிர்காலம்..


வலிக்கிறது

என் விரல்களும்

இதயமும்..


கருகிப்போன கனவுகளை

மீண்டும் யாசிக்கிறது

என் கண்கள்..

உருகிப்போன நினைவுகளை

மீண்டும் தாகிக்கிறது

என் கணங்கள்…


வலிகளில் நிறைந்து போன

என் விழிகளைப்பற்றி

ரணங்களில் புதைந்து போன

என் ஆத்மார்த்தம் பற்றி

துயரப்பாடல்கள் உச்சரிக்கும்

என் பேனா பற்றி

காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்

என் பாவப்பட்ட இதயம் பற்றி

இனிப்பேச யாருமில்லையா…?


உலுக்கி எடுக்கும்

அதிர்வுகளைத் தாங்கி

வாழ்தல் மீதான பயணம் நீள்வது

அத்தனை எளிதில்லை


இனியும் என்ன இருக்கிறது?

சேரத்து வைத்த ஆசைகள்

அநாதையான பின்பும

நம்பியிருந்த உறவுகள்

சுக்கு நு}றான பின்பும்

தேக்கி வைத்த நம்பிக்கை

வேரிழந்த பின்பும்

இனியும் என்ன இருக்கிறது?


காலியாகிப்போன பாசப்பைகளில்

இனி நான் இடப்போவதில்லை

சில்லறை மனிதர்களை..


எல்லா இதயங்களிலும்

போர்வைகள்..

எல்லா முகங்களிலும

முகமூடிகள்..

எல்லா புன்னகைகளிலும்

விஷங்கள்..

எல்லா பார்வைகளிலும்

வக்கிரங்கள்..


உறவென்னும் தேசத்தில்

அகதியாக்கப்பட்டவன் நான்


மனிதர்களைத்தேடிய

என் நித்திய பயணத்தில்

எப்போடு நிகழும் திடீர் திருப்பம்?


யாரையும் குற்றம் சாட்டவில்லை

காரணம்

முதல் குற்றவாளி நான்தானே…?


தூக்கம் இருண்டுபோன

இந்த மெல்லிய இரவில் விழித்திருக்கும்

என் உணர்வுகளைச்சுட்டி

இன்னும் எதைப்பற்றி

நான் பாடப்போகிறேன்…?


ஷிப்லி தென்கிழக்குப்பல்கலை இலங்கை (0094)0716035903


அந்திமாலை பிரசவிக்கும் கவிதைகள்


அந்திமாலைச் சூரியனின்

தேய்ந்து கொண்டிருக்கும் வெம்மை

எதையெல்லாமோ சொல்ல முனைந்து

இறுதியில் எதையுமே சொல்லாமல்

இருட்டின் நிழலுக்காய்

தன்னை விட்டுக்கொடுக்கிறது


தீராத தனிமையின் வலியில்

தனக்குத்தெரிந்த மொழிகளின்

ஊமை வாசகங்களை

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

பறைசாற்றுகின்றன பறவைகள்


நட்சத்திரக் கண்களினுடே

பூமியைக் கண்காணிக்கத் தொடங்கிவிட்டது

கறுப்பாகிக் கொண்டிருக்கும்

நீல வானம்


வானவெளிப் பரப்பில்

சுவடுபதிக்கும்

காற்றின் மென்சலனமும்

நிர்மூலமாகிக் கொண்டிருக்கிறது..


இரவின் நீண்ட நிழலில்

இளைப்பாறத் தொடங்கியிருக்கின்றன

மரங்களும் ஆறுகளும்


ஒவ்வொரு அந்திமாலையும்

நமக்குள் எழுதிச்செல்லும்

மொழிகளைத் தாண்டிய

கவிதைகள் ஏராளம் ஏராளம்


அவைகளை நாம் வாசிக்கப் போவதில்லை

என்று தெரிந்தும் தினந்தோறும்

அது எழுதிக் கொண்டேயிருக்கிறது

வெவ்வேறு கவிதைகளை

நம்மீது..!-


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com


இன்னொரு பிரிவை நோக்கி


கடைசியில்

நிகழ்ந்தே விட்டது

உன்னோடான

பிரிவும்.......


எதிர்பார்த்ததுதான்

இருந்தும்

இத்தனை

சீக்கிரமா?


நீ

அடிக்கடி சொல்லும்

‘பிறகு சொல்கிறேன்’

என்பதை

சொல்லாமலே

போய்விட்டாய்


திருவிழாவில்

குழந்தையைத் தொலைத்த

தாயொருத்தியின்

பதை பதைப்பும்

அழுகையும்

எனக்கு இன்னும்

சில காலம்தான்......


பிறகு

இன்னொரு

பிரிவை நோக்கிய

உறவின் மீதான பயணம்

இயல்பாகவே நிகழ்ந்துவிடும்


!- நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

ஏமாற்றங்களின் நெடும் பயணம்

தொடரும் ஏமாற்றங்களின்
நெடும் பயணத்தை
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்
நீ………..

விடு
குட்டக்குட்ட குனியும்
என் இயலாமையை
சொல்ல வேண்டும்

வரங்களை சாபங்களாக்கிய
தேவதை உனக்காகவா
நான் கடுந்தவம் புரிந்தேன்…?

எனக்கு நிழல் தரும்
என்றெண்ணிய உன்
வார்த்தைகள்
சுட்டெரிக்கும் சூரியனாய்
பொசுக்குகிறது
என்னையும்
மனசையும்…..

பௌர்ணமி வானில்
நீ என்ன
வேண்டுமானாலும்
செய்..
ஆனால்
அமாவாசை வானின்
நட்சத்திரங்களை மட்டும் பிடுங்கி விடாதே…………

-நிந்தவூர் ஷிப்லி தென்கிழக்கு பல்கலை இலங்கை

Captured while maiden book was released...




தொலைதூர அழுகுரல்

பூச்சாண்டி வருவதாக
அன்னை ஊட்டிய
ஒரு பிடிச் சோற்றின்
உயிர்ச்சத்தில்
உதயமானது என் கிராம வாழ்வு

புழுதிக்காற்றின்
மண்வாசனையில்
எத்தனை முறை
நுகர்ந்திருக்கிறேன்
தாய் மண்ணின் சுகந்தத்தை....

மழை நாள் பொழுதுகளில்
தெருவெல்லாம் திரண்டோடும்
அழுக்கு நீரில் கால்
நனைத்து
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....

நிலாச்சோறு
திருட்டு மாங்காய்
சைக்கிள் விபத்து
முதல் காதல்
இன்னும் எத்தனை நினைவுகள்
என் உயிரோடு ஒட்டியபடி....

அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டை காண முடியுமான
ஒரு தேசத்தில் நான்....

பணம் சம்பாதித்துக் கொண்டே
இருக்கிறது
என் உடல்

உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்.....!


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com