காஞ்சீபுரம், நவ. 21-

காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. தேவநாதன் அளித் துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது பூர்வீகம் காஞ்சீபுரம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 5-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் இருந்தே எனது தந்தைக்கு துணையாக கோவிலில் வேலை பார்த்து வந்தேன். அப்போது முதல் கோவிலுக்கு வரும் பெண்களிடம் கனிவாக பேசக்கற்றுக்கொண்டேன்.

பெரும்பாலான பெண்கள் ஏதாவது வேண்டுதலோடுதான் கோவிலுக்கு வருவார்கள். எனது 15 வருட அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ள எண்ணம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் ஏற்பட்டது. குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசத்தில் ஈடுபட்டேன். அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன்.

பெரும்பாலான பெண்களிடம் “அம்பாள்” போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும் 16 ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் வைத்து இன்பம் பெற வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.

சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜூக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன். 2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் போட்டோ காமிரா வசதி இருந்தது.

கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது அவர்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக பட மெடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன். இது போல தொடர்ந்து செய்து வந்தேன்.

எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன். அதன்படி கோவிலில் என்னுடன் லீலைகளில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து லீலைகளில் ஈடுபட்டேன்.

இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசித்து வந்தேன். சில பெண்களை லாட்ஜூகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்தேன்.

தனது குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பெண் ஒருவரை மயக்கினேன். குழந்தைக்கு நோய் தீர வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன். அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன்.

தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை. எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமார் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டது.

இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரிய வில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவ விட்டது தெரிந்தது.

நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன்.

கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அர்ச்சகர் தேவநாதன் ஏராளமான பெண்களுடன் லீலைகளில் ஈடுபட்டார். 8 பெண்களின் பெயரை வெளியில் சொல்லி உள்ளார். அவர்களில் சில பேரோடு லாட்ஜூகளிலும் அறை எடுத்து தங்கி உள்ளார். அவர் அடையாளம் காட்டிய பெண்களிடமும் விசாரணை நடத்தி கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். நேற்று முழுவதும் லாட்ஜூகளில் அதிரடி வேட்டை நடத்தினார். அர்ச்சகருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களை திரட்டி உள்ளனர்.

நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்ததால் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். போலீசார் தேவநாதனிடம் இன்னும் ஏராளமான தகவல்கள் பெற உள்ளதால் மேலும் 3 நாட்கள் காவல் நீட்டிப்பு கோரினர். ஆனால் போலீஸ் காவல் நீட்டிக்கப்படவில்லை.அதனை தொடர்ந்து தேவநாதன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Thanks to Kamesh (Anbudan)

0 comments: